பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது!

Two women caught and arrested for pickpocketing passengers on a public bus.

கோபிசெட்டிப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்கள் பொதுமக்களால் பிடிக்கபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் பயணியிடமிருந்து இரண்டு பெண்கள் கள்ளத்தனமாக ரூ.15 ஆயிரம் பணத்தை கையாடினர். அதன் பிறகு அவர்கள் கவுந்தப்பாடி நால்ரோட்டில் பேருந்திலிருந்து இறங்கினர்.

அந்த சமயத்தில், பணம் திருடப்பட்டதை உணர்ந்த ராஜலட்சுமி சத்தமிட்டார். உடனே அங்கு இருந்த பொதுமக்கள் அந்த இரண்டு பெண்களையும் விரட்டிப்பிடித்து கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.