பிரியாணிக்கு பணம் தராமல் கத்தி காட்டி மிரட்டல் — 2 பேர் கைது!

Two individuals arrested for threatening a vendor with a knife after refusing to pay for biryani.

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தள்ளுவண்டி உணவுக் கடையில், இரு பேர் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வாங்கியுள்ளனர். அதை சாப்பிட்ட பிறகு, பணம் செலுத்தாமல் கடையில் இருந்த புலம்பெயர் தொழிலாளியை கத்தி காட்டி மிரட்டி, கல்லாவில் இருந்த ₹800-ஐ எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த பரபரப்பான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவானது. போலீசார் காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மதன் மற்றும் சச்சின் எனக் கூறப்படுகிறது. இவர்களில் இருவரும் சமீபத்தில் ஜெயிலில் இருந்து விடுதலையானவர்களாகும் என்றும், முன்பும் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.