
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் திடீரென அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பெயரை எடுத்ததை, தன் கட்சியின் கொள்கைத் தலைவர்களை மறந்து விட்டதாக சீமான் குற்றம்சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அறிஞர் அண்ணா 1949ஆம் ஆண்டு கட்சியை தொடங்கி, பல ஆண்டுகள் பாடுபட்டு கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1967ல் தான் ஆட்சியை பிடித்தார். ஆனால் விஜய் திடீரென வந்து ஆட்சியை பிடிப்பேன் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என தெரிவித்தார்.
மேலும், 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் கூறிய “ராஜா இளவரசனை தேடும் கதை”யை, விஜய் தன்னைத்தானே “தளபதியை தேடும் கதை” என மாற்றிச் சொன்னதாகவும் சீமான் கடுமையாக விமர்சித்தார்.
“தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உயிருடன் இருந்த போது ஒருமுறையாவது சென்று பார்க்காத விஜய்க்கு இப்போது என்ன திடீர் பாசம்?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.