
சாத்தான்குளம் அருகே முனியன்வலசையை சேர்ந்த வர்ஷனா என்ற மாணவி வீட்டில் இருந்த டேபிள் ஃபேனை ஆன் செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
வர்ஷனாவைக் காப்பாற்றச் சென்ற அவரது சகோதரி ரட்ஷதியா மீது கூட மின்சாரம் பாய்ந்ததால், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.