
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிரிஜா என்ற பெண், தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன் என கூறி, உதவியாளர், ஹெட் க்ளார்க், ஓஏ உள்ளிட்ட பணிகளை வாங்கித் தருவதாக நம்பிக்கை அளித்துள்ளார்.
இதற்காக பலர் மீது வேலை கிடைக்கும் என்ற ஆசையை கட்டி, 40க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடி 10 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் கிரிஜாவுக்கு அவரது கணவர் ரமேஷ் மற்றும் தாயார் கல்பனா ஆகியோர் துணைபோனதாக தெரிகிறது. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.