
தமிழக பாஜக மாநில சிந்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு பாஜக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
“தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அவர் நாள்தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் மூன்றாவது இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் எதிர்பார்த்ததை விட பெரும் திரளான கூட்டம் கூடுகிறது. எழுச்சியுடன் பாஜக தொண்டர்கள் பங்கேற்று வருவது உற்சாகம் அளிக்கிறது” எனக் கூறினார்.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. தலைவர் விஜய், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பா.ம.க. இளையோர் பட்டாளத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.