சிதம்பரம் வீனஸ் பள்ளியில் சிறார்களுக்கு மேளதாள வரவேற்பு!

Children at Chidambaram Venus School being welcomed with traditional melodic drums

சிதம்பரம் தேரடி தெருவில் உள்ள வீனஸ் மழலையர் பள்ளியில் இந்த கல்வியாண்டுக்காக எல்கேஜி வகுப்பில் சேர்ந்த புதிய மாணவ-மாணவிகளுக்கு மரியாதை மற்றும் மகிழ்ச்சியுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. பள்ளியில் இம்முறை புதியதாக சேர்க்கை பெற்ற 40க்கும் மேற்பட்ட சிறார்கள், பெற்றோர்களுடன் பிள்ளையார் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதையடுத்து, மாணவர்களுக்கு மாலை அணிவித்து, மேளதாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டது. பள்ளியின் வளாகத்திற்கு வந்தபோது, பள்ளி தாளாளர் வீனஸ் குமார் நேரில் மலர் கொத்து கொடுத்து அவர்களை வரவேற்றார். பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றிய அவர், பள்ளியில் படித்து செல்லும் மாணவர்கள் உயர்கல்வியில் முன்னேறி அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் உள்ளதாகவும், கல்வியே வாழ்க்கையை உயர்த்தும் முக்கிய கருவி எனவும் எடுத்துரைத்தார்.

பள்ளி வந்த குழந்தைகளுக்கு ஆசிரியைகள் திலகமிட்டு வரவேற்று வகுப்பறையில் அமர்த்தினர். நிகழ்ச்சியில் பள்ளி இணைத் தாளாளர் ரூபியாள்ராணி, முதல்வர்கள் லியோ பெஸ்கிராவ், ராஜலட்சுமி மற்றும் மழலையர் ஆசிரியர்கள் சித்ரா, சோனியா காந்தி, கீர்த்தனா, சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவ, மாணவிகளின் இனிய தொடக்கத்திற்கு விழாவாக அமைந்த இந்நிகழ்வு, பெற்றோர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.