
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே தளி பெல்லூர் என்ற கிராமத்தில் 2021 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் லோகேஷ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார்.
அந்த நேரத்தில் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, லோகேஷை குறிவைத்து சுட்டுச் சென்றனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில், ரவுடியாக முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ள கஜேந்திரமூர்த்தி (ரவுடி கஜா) மற்றும் எதுபூஷன் ரெட்டி என்பவர்களே இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்து, தற்போது ஒசூர் நீதிமன்றம், இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையை விதித்ததுடன், கூடுதலாக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
குற்றவாளிகள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முக்கிய முன்னுதாரணமாக அமையும் எனக் கூறப்படுகிறது.