
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி, தனது தாத்தா மற்றும் பாட்டிக்கு இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்தார்.
இந்தச் சான்றிதழ் வழங்க, அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ரூ.3,500 லஞ்சம் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாரீஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில், ரசாயனம் தடவிய பணத்தாள்களை வழங்கியவுடன், செந்தில்குமார் பணத்தைப் பெற்றுக்கொண்டார். அந்தச் சமயத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை மடக்கி கைது செய்தனர்.
செந்தில்குமாரை தொடர்ந்து விசாரணைக்காக காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.