
கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஜெயராஜ், அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் கடந்த மாதம் புகார் அளித்தனர். புகாரின் பேரில், மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் விசாரணை நடத்தி, ஜெயராஜை குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணையை தொடர்ந்து மேற்கொண்ட போலீசார், ஜெயராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த கைது, மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.