
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுகவின் அம்மனூர் ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கை கடந்த ஏப்ரல் மாதம் வெட்டி துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது அவினேஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
சம்பவத்திற்குப் பின், அவினேஷ் ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தார். அப்போது சிலர் அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், அவர் அங்கிருந்து ஓடினார். அவரை விரட்டி சென்ற குழு கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, திமுக கவுன்சிலர் அஸ்வினி, அவரது கணவர் சுதாகர் உள்பட மொத்தம் 9 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.