
திருவள்ளூர் மாவட்டம் குமாரகுப்பம் அருகே நேற்று இரவு சாலையோரம் ஒரு டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்தது. இதே சமயம், ஸ்கூட்டரில் வந்த குமார் என்பவர், தனது மனைவி சுதாவை பின்புறம் அமர வைத்து பயணம் செய்தார்.
பயணத்தின் போது, சுதாவுடன் பேசியபடியே வாகனத்தை இயக்கிய குமார், கவனக்குறைவால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் பின்புறம் நேரே மோதினார். இவ்வாறு மோதி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவர் உயிரிழப்பை கண்முன்னே கண்ட சுதா கடும் துயரத்தில் ஆழ்ந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.