
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர், ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். அவரில் மூத்த மகன் ஒரு அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில், இரண்டாவது மகன் ரோகித் (வயது 4), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார்.
திங்கள்கிழமை காலை, தனது இரு மகன்களையும் பள்ளிக்குச் சேர்க்க தந்தை முருகவேல் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். வழக்கம்போல பள்ளிக்கு செல்கின்றபோது, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் ஆட்டோ நிலை தடுமாறி திடீரென கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ரோகித் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரமான நிகழ்வு தந்தை முருகவேலின் கண் முன்னிலையில் நடந்தது என்ற காரணத்தால், அவரும் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
இதை அறிந்த விருத்தாசலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.