நிதி நிறுவன அதிபர் அருள்தாஸ் கொலை – ஆட்டோ, அரிவாளை விட்டுவிட்டு தப்பிய கும்பல்!

"Murder of finance firm head Arul Das; gang flees, abandoning auto-rickshaw and machete at the scene."


நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள மேல் ஈச்சவாரி பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவனர் அருள்தாஸ், வழக்கம்போல் தனது உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் அவர் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அவரை மர்ம நபர்கள் சரக்கு ஆட்டோவில் பின்தொடர்ந்துள்ளனர்

மேல் ஈச்சவாரி பகுதியில் அருள்தாஸை வழிமறித்த அவர்கள், அரிவாளால் அடிக்கடி தாக்கி படுகொலை செய்துள்ளனர். இந்நிலையில், அருகிலிருந்தவர்கள் ஒலி எழுப்ப, அச்சத்தில் பதற்றமடைந்த கொலைகாரர்கள், பயன்படுத்திய சரக்கு ஆட்டோவும் அரிவாளையும் அங்கு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.