
சென்னை நகரம் காசிமேடு பகுதியில் டிபன் கடையை நடத்தி வந்தவர் சேகர் (வயது 62). இன்று காலை அவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் திடீரென தீப்பற்றியது.
அப்போது சேகர் உள்ளே இருந்த அவரது மனைவியை மீட்பதற்காக வீட்டுக்குள் சென்று மனைவியைக் காப்பாற்றினார். மனைவி பாதுகாப்பாக வெளியே வந்த பிறகு சேகர் தீயை அணைக்க முயன்றபோது அருகில் இருந்த ஏசியிலும் தீ பரவியுள்ளது
இதனால் தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் பாத்ரூமில் ஒளிந்துள்ளார். ஆனால், பியூசி கதவில் தீப்பற்றியதால் உருவாகிய புகையால் மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பகுதியிலுள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேகரின் வீர சாகசமும், தனது மனைவிக்காக செய்த தியாகமும் பக்தியுடன் பேசப்படுகின்றன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.