
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் 66 வயதான அகமது நாச்சியார் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். அந்த பகுதியில் வசித்து வந்த சாகுல் ஹமீது என்பவர் அவரது உறவினராக இருப்பதாக கூறப்படுகிறது.
அகமது நாச்சியார் அணிந்திருந்த 5 சவரன் நகையை இலக்காக வைத்து சாகுல் ஹமீது, தனது நண்பருடன் சேர்ந்து அந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் பெற்ற போலீசார் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.