
சென்னை ஆலந்தூரில் அறை எடுத்து தங்கிய தந்தை தனது 6 வயது மகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்றவர், ஆலந்தூரில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். குடும்பத்திலேயே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற ஆத்திரத்தில் விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தனது 6 வயது மகளை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சதீஷ்குமாரை போலீசார் உடனே மீட்டு ராயப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆலந்தூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.