டெலிவரி ஊழியரை தாக்கிய திமுக கவுன்சிலர்!

A DMK councillor allegedly assaults a courier worker, leading to public outrage and political controversy.


தருமபுரி மாவட்டத்தில் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வரும் ஜெகன், சமீபத்தில் சமூக வலைத்தள லிங்க் மூலம் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்தார். குறிப்பிட்ட பொருள் தவிர வேறு பொருள் பார்சலில் இருந்ததாக கூறி, நேற்று அவர் நேராக அந்த கொரியர் அலுவலகத்துக்கே சென்றார்.

அங்கு டெலிவரி ஊழியர் ஹரிஹரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெகன், “நீங்கள் தான் பொருளை மாற்றி வைத்துள்ளீர்கள்” என குற்றம் சுமத்தியதாக கூறப்படுகிறது. இதே காரணமாக கோபத்தில் அவர் ஹரிஹரனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

கொரியர் ஊழியர் ஹரிஹரன் தருமபுரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கவுன்சிலர் ஜெகன் குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.