
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகபெருமாள் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி, வீட்டு கட்டுமான தேவைக்காக கடன் வாங்கியுள்ளனர்.
இந்தக் கடன் சுமை காரணமாக கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு என்பது வழக்கமாகி இருந்தது.
இன்று காலையில், வீட்டு சமையலறையில் இருந்த மகாலட்சுமி, கணவன் முருகபெருமாளுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதே நிலையில், கட்டுப்பாட்டை இழந்த முருகபெருமாள், அரிவாளை எடுத்து மகாலட்சுமியின் கைகள் மற்றும் தலையில் மாறி மாறி வெட்டி கொலை செய்துள்ளார்.
கண் முன்னால் அம்மா அரிவாளால் வெட்டப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த , இரு மகன்களும் சத்தமிட்டு அலறியுள்ளனர்.
அவர்கள் கூறுவதாவது, “அம்மாவின் முகம் முழுக்க ரத்தம்.. கீழே விழுந்துவிட்டாங்க.. அப்பா கையிலும் தலையிலும் வெட்டினார்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முருகபெருமாளை கைது செய்தனர். அவரது மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாயை இழந்து, தந்தையையும் இழந்த நிலைமைக்குள் தள்ளப்பட்ட சிறுவர்கள் மன அழுத்தத்துடன் உறவினர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.