
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில், அண்மையில் உயிரிழந்த கோவில் அர்ச்சகர் ஞானமுத்துவின் வீட்டில் இருந்து 107 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அர்ச்சகர் ஞானமுத்து உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி பிரியா, தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், வீடு காலியாக இருந்ததை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், யாரும் இல்லாத நேரத்தை கண்காணித்து, வீட்டுக்குள் நுழைந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 107 சவரன் தங்க நகைகளை களவாடிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலியாக இருந்த வீட்டை துல்லியமாக குறிவைத்து திருடர்கள் செயலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குலசேகரன்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.